24.8 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இந்தியா

இந்திய இராணுவ வீரர்கள் இறப்பு

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் சிக்கி கடலோர காவல் படையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஏ.எல.ஹெச் துருவ் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர்.

இது குறித்து போர்பந்தர் பொலிஸ் சூப்பிரெண்டு பகிரத்சிங் ஜடோஜா கூறுகையில், இன்று மதியம் 12.10 மணியளவில் போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடலோர காவல் படையின் மேம்பட்ட இலகுர ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியின் போதே விபத்து ஏற்பட்டது என கூறியுள்ளார்.

தொழில்நுட்ப சிக்கலே விபத்திற்கான காரணம் என முதற்கட்ட விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment