29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு இதே அளவு வரி அறவீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக்க சில்வா இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையில், இந்த நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகுவதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, நாட்டில் சுமார் 1 லட்சம் மில்லியன் கிலோ தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், இது விவசாயிகளின் பொருளாதாரத்தை அதிகரிக்கக் காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் உரிய முறையில் வரியளிக்கப்படாததால், இது அரசு வருமானத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.

அதோடு, முன்னதாக அனைத்து அரசியல் கட்சிகளும் உள்நாட்டு கைத்தொழில்களை பாதுகாக்கும் உறுதிமொழி அளித்திருந்த போதிலும், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உறுதிமொழிகள் செயல்படுத்தப்படாமல் பேச்சுக்களாகவே மாறியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்து அரசின் நிலைப்பாடு மற்றும் தீர்வுகள் பற்றிய எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!