இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் இடைக்கால பதில் தலைவராக சீ.வீ.கே.சிவஞானம் பதவி வகிப்பார் என அந்த கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுத்துள்ளது.

இன்று (28) வவுனியாவில் நடந்த மத்தியகுழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்துக்கு மாவை சேனதிராசா வரவில்லை.

அவர் பதவிவிலகல் கடிதம் கொடுத்து விட்டார், அது ஏற்றுக்கொள்ளப்பட்டு பதில் பொதுச்செயலாளர் அடுத்த நடவடிக்கைகளுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் என கூறப்பட்டது.

இதை தொடர்ந்து புதிய பதில் தலைவராக சீ.வீ.கே.சிவஞானத்தை நியமிப்பதென முன்மொழியப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கட்சியின் பதவிநிலைகளில் மாற்றம் செய்யும் அதிகாரம் மத்தியகுழுவுக்கு இல்லை, இந்த பிழையான தீர்மானத்தில் நான் பங்கேற்கவில்லையென குறிப்பிட்டு வைத்தியர் சிவமோகன் வெளிநடப்பு செய்தார்.

மாவை சேனாதிராசா கட்சியின் பெருந்தலைவராக இருப்பார் என சிலர் கூற முற்பட்ட போது, கட்சி யாப்பில் இல்லாத பதவிகளை வழங்குவதில் அர்த்தமில்லையென சி.சிறிதரன் தெரிவித்தார். இதனால் அந்த யோசனை கைவிடப்பட்டது.

கட்சியின் பேச்சாளர் யாரென்ற விடயம் ஆராயப்பட்ட போது, கட்சியின் பேச்சாளராக எம்.ஏ.சுமந்திரனும், பாராளுமன்ற குழு பேச்சாளராக ஞா.சிறிநேசனும் செயற்படுவார்கள் என கூறப்பட்டது. மத்தியகுழு கூட்டத்தின் பின், பதில் தலைவர் சிவஞானம் இதனையும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கடந்த தேர்தல்களில் கட்சியை விட்டு, பிற கட்சிகளில் தேர்தலில் போட்டியிட்டவர்களை கட்சியை விட்டு நீக்குவதென்றும், கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களை இடைநிறுத்தி விசாரணை செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி வைத்தியர் சிவமோகனும் இடைநிறுத்தப்பட்டார்.

கட்சியின் 75வது மாநாட்டை மட்டக்களப்பில் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப்...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்