அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் மோசடி

Date:

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியென குறிப்பிட்டு வட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பண மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அமைச்சர் ஹந்துன்நெத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் நேற்று (24) செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தனது புகாரில், தன்னை போல ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணையும், பணம் எடுக்க பயன்படுத்திய கணக்கு எண்ணையும் கொடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி அமைச்சருடன் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுடன் வாட்ஸ் அப் ஊடாக சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக போலி கையொப்பத்துடன் கூடிய போலி விளம்பரமும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பெயர், கட்சியின் பெயர் மற்றும் தனது புகைப்படம் ஆகியவை மோசடி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்