27.9 C
Jaffna
April 8, 2025
Pagetamil
மலையகம்

தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல்

நேற்று (18.12.2024) பிற்பகல் இறந்த சிறுத்தை ஒன்றின் உடல் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தையின் சடலம் ஒன்று உயிரிழந்து கிடப்பதாக தோட்ட தொழிலாளர்களால் ஹட்டன் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த பகுதி பொலிஸார் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது, சிறுத்தையின் தலை மற்றும் நான்கு கால்கள் வேட்டையாடுபவர்களால் வெட்டப்பட்டிருந்ததாக ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 10 வயதுடைய நன்கு வளர்ந்த சிறுத்தையே கொல்லப்பட்டுள்ளதாகவும், சிறுத்தையின் சடலம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்

பிரச்சாரத்தை ஆரம்பித்த அனுஷா அணி

Pagetamil

கோடீஸ்வர வர்த்தகரையும், மகளையும் கட்டிவைத்துவிட்டு முகமூடிக் கொள்ளையர் கைவரிசை!

Pagetamil

பொகவந்தலாவையில் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

Pagetamil

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!