கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Date:

கஞ்சா வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரி சங்கர் சென்னையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்த சங்கர் பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கோவை போலீஸாரால் தேனியில் கைது செய்யப்பட்டார். அவர் தங்கியிருந்த விடுதி மற்றும் காரில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி, அவர் மீது தேனி போலீஸார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, கஞ்சா வழக்கிலும் சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர், அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டதால், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சங்கர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், குண்டர் சட்டமும் ரத்தானது.

இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கடந்த சில விசாரணைகளின்போதும் சங்கர் ஆஜராகததால், அடுத்த விசாரணையின்போது ஆஜராகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரித்திருந்தார். அப்போதும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, தேனி போலீஸார் சென்னைக்குச் சென்று, சவுக்கு சங்கரை கைது செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்...

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்