25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

யாழில் பேருந்து மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் வீதியோரத்தில் இருந்த இருவர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த 76 வயதான நபரும் அவரது மகனும் விபத்தில் படுகாயமடைந்தனர்.

பின்னர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மகன் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

பேருந்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், இளவாலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment