தொடரும் கனடா மற்றும் இந்தியா பகை

Date:

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் அதன் அண்மையை நடவடிக்கையாக இந்தியாவை ஒரு “சைபர் எதிரியாக” வகைப்படுத்தி, இணைய பாதுகாப்பில் உள்ள விரோத நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளது.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் கனேடிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

இந்த தீர்மானத்துக்கு இந்திய வெளி விவகார அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கனடா இந்தியாவின் உலகளாவிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையே கனடா, அங்குள்ள தமது தூதரக ஊழியர்கள் மீது கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்திய அதிகாரிகளை கனடா ஒடியோ மற்றும் வீடியோ கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் அச்சுறுத்தப்பட்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்