அறுகம் வளைகுடாவிற்கு விஜயம் செய்த குழுவினருக்கு அப்பகுதியில் பல இடங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் போலியாக அச்சுறுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியில் இருந்து அறுகம் குடாவிற்கு வந்த குழுவினரின் முறைப்பாட்டுக்கு அமைய பொத்துவில் பொலிஸார் சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (27) கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் அம்பாறை சாய்ந்தமருதில் வசிக்கும் 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




