தேயிலைத் தோட்டத்துக்குள் பாய்ந்த கார்

Date:

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி கீழுள்ள தேயிலை தோட்டத்திற்குள் உருண்டு விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மல்லியைப்பூ சந்திக்கு அருகாமையில் கொழும்பு பக்கமாக 200 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த கார் ஒன்றே இவ்வாறு இன்று (29) அதிகாலை 2 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் எவருக்குக காயம் எதுவும் ஏற்டவில்லை என்றும் கார் மாத்திரம் சேதமடைந்துள்ளதாகவும் சீரற்ற காலநிலை காரணமாக வீதி வழுக்கும் நிலையில் காணப்படுவதனால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் பொலிஸார் தெரிவித்தனர்.

சீரற்ற காலநிலை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதனால் வளைவுகள் நிறைந்த மலையக பாதைகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்