அறுகம்குடாவுக்கு வந்த அனைத்து இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளும் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன நேற்று (28) தெரிவித்தார்.
அறுகம்குடாவிலிருந்து இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் விலகியிருந்தாலும் ஐரோப்பியர்கள் அப்பகுதிக்கு வருகை தருவதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு உரிய முறையில் பேணப்பட்டு வருவதாகவும், அறுகம்குடாவைச் சுற்றி முப்படையினரும், பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களும் பயன்படுத்தப்படுவதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.



