இலங்கை தூதரின் வீட்டு பணிப்பெண் துன்புறுத்தல் முறைப்பாடு: பிரித்தானிய பொலிசார் விசாரணை!

Date:

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் இங்கிலாந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வீட்டில் சமையல்காரராக இருக்கும் வீட்டு உதவியாளர், அவரது நண்பர் ஒருவர் மூலம் அவசர தொடர்பு தொலைபேசியில் பொலிஸில் புகார் செய்தார்.

வீட்டுக்குள் ஒருவர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக வந்த புகாரின் பேரில் பொலிசார் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர்.

ஆனால், எந்த சட்ட நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை.

இராஜதந்திர விலக்கு காரணமாக பொலிசார் வீட்டிற்குள் நுழையவில்லை என்று இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளது.

பின்னர், அவசர கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வீட்டுப் பணிப்பெண் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

இவருக்கு முன்னர் பிரித்தானிய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிபுரிந்த நபரும் போகொல்லாகம குடும்பத்தாரின் மரண அச்சுறுத்தல் காரணமாக வீட்டை விட்டு ஓடி பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்