ரஞ்சனின் கூட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டவர்களிற்கு பணம் வழங்கப்படவில்லை

Date:

ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் அங்குரார்ப்பண மாநாடு நேற்று (27) நிறைவடைந்ததை அடுத்து சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டது.

மாநாட்டில் கலந்து கொண்ட 200இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியினர் வாக்குறுதி அளித்தபடி பணம் தரவில்லை என குற்றம்சாட்டினர்.

இவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் எனவும், அவர்களுக்கு 2000 ரூபாவும் உணவுப் பொட்டலமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்தே இந்த அரசியல் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் பொலிசார் தலையிட்டு அந்த இடத்தில் தங்கியிருந்த சுமார் 200 இளைஞர்களை அவர்களது இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான சமூகப் பணி அணுகுமுறை அவசியம் – ரஷாத்

போதைப்பொருள் பாவனையாளர்களை வெறுமனே குற்றவாளிகளாகவோ அல்லது பிரச்சினைக்குட்பட்ட நபர்களாகவோ பார்க்காமல், அவர்களின்...

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்