கசிப்புடன் ஒருவர் கைது

Date:

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி பகுதியில் கசிப்புடன் சந்தேக நபரொருவர் இன்று வியாழக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அராலித்துறை பகுதியில் நீண்ட நாட்களாக இந்த நபர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவருவதாக இரகசிய தகவல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையிலேயே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பின்போது சந்தேக நபரின் வீட்டிலிருந்து 07 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மீட்கப்பட்ட கசிப்புடன் சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர், சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்