Pagetamil
இலங்கை

அரசியலில் இருந்து சிறிதுகாலம் விலகியிருப்பதாக கெஹலிய அறிவிப்பு!

அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கண்டியில் இன்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கண்டி மாவட்ட வாக்காளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் குழுவை கண்டி ஒக்ரே ஹோட்டல் வளாகத்திற்கு அழைத்து இதனை அறிவித்தார்.

அவர் இந்த குழுவை அழைத்து அவர்களுக்கு நட்பு மதிய உணவை வழங்கினார்.

இந்த சிநேகபூர்வ சந்திப்பில் மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துகொண்டது.

இங்கு உரையாற்றிய மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி.சிறிசேன,

இன்றைய சந்திப்பு அரசியல் சந்திப்பு அல்ல. தேர்தலின் போது தமக்கு உதவிய கண்டி மக்களிடம் பேசி குறுகிய காலத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பேன் என்பதை தெரிவிக்க கெஹெலிய விரும்பினார் என்றார்.

இந்த நட்புறவு கூட்டத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!