29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

தேர்தலில் இருந்து விலகிய அஜித் மன்னப்பெரும

கம்பஹா மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் தனது பெயர் உள்ளடங்கியுள்ள போதிலும் இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட ஆசன அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமையினால் இந்த தீர்மானம் எடுத்ததாக ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் குறிப்பிட்டார்.

“இந்தத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் நான் வேட்பாளராக உள்ளேன்.

அத்துடன், 20 வருடங்களாக கம்பஹா தொகுதி அமைப்பாளராக கடமையாற்றி வருகின்றேன்.

ஆனால் இம்முறை என்னை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக நியமித்தாலும், வாக்கு கேட்பதைத் தவிர்க்க எண்ணினேன்.

நான் குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை, எனவே அந்த வாக்கை எனக்காக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவால் நான் விரக்தியடைந்துள்ளேன்.

வேட்புமனுவில் கையொப்பமிட்டு 24 மணித்தியாலங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவிடம் பணியாற்றிய ஒருவருக்கு கம்பஹா தொகுதியின் ஆசன அமைப்பாளர் பதவி இரகசியமாக வழங்கப்பட்டது. இது மிகவும் வெறுப்பாக உள்ளது” என்றார்.

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!