ஜனநாயக தமிழ் அரசு என்ற பெயரில் யாழில் களமிறங்கும் அதிருப்தியாளர்கள்

Date:

இலங்கை தமிழ் அரசுக்கட்சியிலிருந்து அண்மையில் விலகிய பிரமுகர்கள் பலர் ஒன்றிணைந்து, எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.

ஜனநாயக தமிழ் அரசு கட்சி என்ற பெயரில் சுயேச்சையாக இவர்கள் களமிறங்கவுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.ஐங்கரநேசன், தமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணி உறுப்பினர்களான விமலேஸ்வரி, நாகரஞ்சினி, கரவெட்டி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் த.ஐங்கரன், புதிய சுதந்திரன் ஆசிரியர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, ஊர்காவற்துறை பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் கருணாகரன் நாவலன் உள்ளிட்டவர்கள் இந்த அணியில் போட்டியிடவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார்

கோடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே நேற்று (29) காலமானார். அவர்...

எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

இலங்கை கிரிக்கெட்டின் உருமாற்றக் குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்...

கடன் பணம் மாயம்: பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி

வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்