வாகன இறக்குமதிக்கான பரிந்துரைகளை மத்திய வங்கி சமர்ப்பித்துள்ளது!

Date:

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்புகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்கியுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2022 இல், இலங்கை வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அப்போது, ​​வாகனங்கள் உட்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு அப்போதைய அரசு இறக்குமதி கட்டுப்பாடு விதித்தது.

ஆனால் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, பல பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதித்தது. அதன்படி, தடையின்றி இறக்குமதியை அனுமதிக்கும் வகையில் இறுதி தளர்வு இருக்க வேண்டும். இதன்படி, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான பூரண அனுமதியை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்குள் வழங்குவதற்கு முன்னைய அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த தீர்மானத்தில் தற்போது மாற்றம் ஏற்படுமா என மத்திய வங்கி ஆளுநரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு இருப்புக்களை பாதிக்காத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரைகளை திறைசேரிக்கு ஏற்கனவே வழங்கியுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

ஆனால் அவ்வாறு வாகன இறக்குமதியை அனுமதிப்பது குறித்து நிதியமைச்சு முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

казино онлайн 2025 для игры на реальные деньги.417

Оцените топовые казино онлайн 2025 для игры на реальные...

நுரைச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி மீது விசாரணை

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நுரைச்சோலை காவல் நிலையப்...

ஒரே வங்கிக்கணக்கிலிருந்து முஸ்லிம், சிங்கள அடிப்படைவாதிகளுக்கு சம்பளம்: ராஜபக்சக்களின் திருகுதாளங்களை அம்பலப்படுத்திய அனுர!

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்