இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுகிறார் சசிகலா: யாழில் தேர்தலில் களமிறங்குகிறார்!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலக, சசிகலா ரவிராஜ் தீர்மானித்துள்ளார். இதற்கான அறிவிப்பை நாளை (7) வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் சசிகலா ரவிராஜின் பெயர் சேர்க்கப்படவில்லை. தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் தெரிவுகுழுவில், எம்.ஏ.சுமந்திரன் ஆதரவாளர்களே பெருமளவில் உள்ள நிலையில், எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு தரப்பினரே வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். எம்.ஏ.சுமந்திரனை ஆதரித்து பேஸ்புக்கில் பதிவிடும் பெண்ணுக்கும் யாழ்ப்பாண வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கியது பல தரப்பினாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் அரசு கட்சியின் இந்த செயற்பாடுகளால் அதிருப்தியடைந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்தார்.

சசிகலா ரவிராஜ் கட்சியை விட்டு விலகும் முடிவை நாளை காலை அறிவிப்பார் என தமிழ்பக்கம் அறிந்தது.

அவர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். எந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட விபரங்களை சசிகலா நாளை அறிவிப்பார்.

spot_imgspot_img

More like this
Related

உயர் நடுத்தர வருமான நாடாக இலங்கை: தடுப்பூசிகளுக்கான சலுகைகள் இழப்பு!

உலக வங்கியின் புதிய வருமான வகைப்பாட்டின் கீழ் இலங்கை உயர் நடுத்தர...

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்