ஆணுறுப்பை வெட்டி மேசையில் வைத்துவிட்டு உயிர்மாய்த்த இளைஞன்!

Date:

இருபத்தி ஆறு வயதுடைய திருமணமாகாத இளைஞன், தனது ஆணுறுப்பை வெட்டி வீட்டு மேசையில் வைத்து விட்டு, தனது மரணத்தில் வேறு எவருக்கும் தொடர்பில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு, தூக்கில் தொங்கிய சம்பவம் தொடர்பில் ஹபரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹபரணை, திருகோணமலை வீதியில் ஹபரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்தது.

இவர் நேற்று முன்தினம் (02) காலை 11.30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த 1ஆம் திகதி பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக சென்ற அவர், சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மறுநாள் (2ஆம் திகதி) தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தந்தை ஹபரணை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் தாயாரும் மன உளைச்சலுக்கு ஆளானவர் எனவும் தந்தை பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிக வலி காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்