13 வயதான இரட்டையர்கள் கல்விப்பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
களுபோவில அன்டர்சன் வீதிப் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்களே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர். நுகேகொடை புனித ஜோன்ஸ் (மகளிர்) கல்லூரியில் எட்டாம் ஆண்டில் கல்வி கற்கும் டபிள்யூ.பி.நித்திகா சத்யா (13), கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் எட்டாம் தரத்தில் பயின்று வந்த அவரது இரட்டைச் சகோதரன் டபிள்யூ.பி.பி. நிஷான் சஹாஜித் (13) என்பவருமே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.
சிறுவயதிலேயே க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் வகையில் இரு பிள்ளைகளும் சட்டரீதியாக அந்தந்தப் பாடசாலைகளை விட்டு வெளியேறிய நிலையில், தனியார் கல்வி ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் இவ்விரு பிள்ளைகளும் இந்தச் சாதனையை எட்டியுள்ளதாக இரட்டைக் குழந்தைகளின் தந்தையான நிஷாந்த தெரிவித்தார்.




