பிரதான தமிழ் கட்சிகளின் தலைவர்களை கொழும்பிலுள்ள இந்திய தூதர் இன்று சந்திப்புக்காக அழைத்துள்ளார்.
மாலை 3 மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கும்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியினர் சந்திப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரு தரப்பையும் ஒற்றுமையாக களமிறக்குவதற்கான சந்திப்பாக இது இருக்கலாமென கருதப்படுகிறது.




