அரசியலமைப்பு பேரவைக்கு விஜித ஹேரத் நியமனம்

Date:

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை அரசியலமைப்பு பேரவையின் உறுப்புரிமையிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நீக்கியுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீக்கம் செய்யப்பட்ட நிமல் சிறிபால டி சில்வாவிற்கு பதிலாக அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அடுத்த பாராளுமன்றம் கூடும் வரை சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவை செயற்பட வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி, அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தொடர்ந்தும் செயற்படுகிறார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அமைச்சர் விஜித ஹேரத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளான கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்களாவர்.

spot_imgspot_img

More like this
Related

1 பில்லியன் டொலர் மோசடி! சில வங்கிகள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்