தேசபந்து தென்னகோனின் இடைக்கால தடையை நீக்க கோரிய மனு நிராகரிப்பு

Date:

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் இடைக்கால உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை உயர் நீதிமன்றம் இன்று (18) நிராகரித்துள்ளது.

பெல்லன்வில தம்மரதன தேரர், பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் மற்றும் கொட்டபிட்டிய ராகுல தேரர் ஆகியோர் இந்த மனுக்களை முன்வைத்தனர்.

இந்த இடைக்கால மனு இன்று யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்படி, இந்த உத்தரவை அறிவித்த நீதிபதி யசந்த கோதாகொட, முதல் பார்வையில் வழக்கு ஒன்றுக்கு ஆதாரம் இல்லாததால், இந்த இடைக்கால மனுவின் உள்ளடக்கங்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு வரலாற்றிலேயே...

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்