வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தத்தில் கடலில் நீராடியவர் பலி

Date:

துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுர்த்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடிய குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அம்பன் குடத்தனையைச் சேர்ந்த கந்தசாமி வினோகரன் (54) என்பவராவார்.

நேற்று (17) செவ்வாய்க்கிழமை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுர்த்திரத் தீர்த்தம் இடம்பெற்றது.

வல்லிபுர ஆழ்வார் தீர்த்தம் ஆடியதன் பின்னர் கடலில் குளித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கிய நிலையில், நோயாளர் காவு வண்டி ஊடாக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை மொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்