திருகோணமலை நீதிபதி இடைநீக்கம்!

Date:

திருகோணமலை மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு வியாழக்கிழமை (12) பணி இடைநீக்க கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

அவர் மீதான முறைகேடு குற்றச்சாட்டை விசாரித்த நீதிச் சேவைகள் ஆணைக்குழு, விளக்கம் கேட்டு அவரை இடைநீக்கம் செய்தது.

மாவட்ட நீதிபதியாக செயற்படுவதற்கு திருகோணமலை பிரதான நீதவான் இ.பயாஸ் ரசாக் நியமிக்கப்பட்டுள்ளார்.

புல்மோட்டை பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீடொன்றில் எம்.கணேசராஜா சென்ற போது, பொதுமக்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டதும், பின்னர் பொலிசார் அவரை மீட்டதாகவும், அந்த பெண் மீது திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று நடந்து வருவதாகவும் நேற்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது- தொழில் திணைக்களம் அறிவிப்பு

EPF உடன் தொடர்புடைய பொது மக்கள் சேவைகள் இரு நாட்கள் இடம்பெறாது-...

மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின்...

பொன்சேகா மீதான தற்கொலை தாக்குதல்: 17 வருடங்களின் பின் சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்யும் நோக்கத்தில், விடுதலைப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்