திருடிய வீட்டில் உடைமாற்றி வெளியேறிய திருடன்: சாவகச்சேரி பொலிசார் வலைவீச்சு!

Date:

யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் யாரும் இல்லாத வேளை இனந்தெரியாத நபர் ஒருவர் புகுந்து பெருமளவு பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பித்துள்ள சம்பவம் தொடர்பில் சிசிரிவி கமராவில் பதிவாகிய காணொளி ஆதாரத்துடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில், வியாழக்கிழமை (29) அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த கமராவில் , நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழையும் போது ஒரு உடையுடனும் வீட்டில் நுழைந்து திருட்டை மேற்கொண்ட பின் வெளியேறும் போது வேறு உடையையும் மாற்றிச் செல்வது பதிவாகியுள்ளது .

குறித்த காணொளியினை சாவகச்சேரி பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளதுடன் அதில் பதிவாகியுள்ள நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 0718591337 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலித செனவிரட்ன மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் மக்கள் வீடுகளில் பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இனப்படுகொலை வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரும் அபத்தம் பொ. ஐங்கரநேசன் காட்டம்!

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம்...

MSC Elsa 3 கப்பல் விபத்து: கடலில் சிந்திய பிளாஸ்டிக் துகள்களில் 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சேகரிப்பு

கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில்...

இலங்கை வந்த பாலஸ்தீன யுவதிக்கு ஏற்பட்ட சோக முடிவு

பென்டாரா சுற்றுலாப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதற்காகப் பறந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்