பாராளுமன்றத்தில் அறிவித்தாலும் பதவியை துறக்காத தலதா!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்து கோரள தனது பதவியை இராஜினாமா செய்வதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள போதிலும், சபாநாயகருக்கு நேற்றும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாததன் காரணமாக அடுத்த பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் சிக்கலாகியுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீரவிடம் வினவிய போது, ​​தலதா அத்துகோரள தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்காததால், அந்த பாராளுமன்ற வெற்றிடத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியவில்லை என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அத்து கோரள நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தலதா அதுகோரளவின் இராஜினாமாவுடன், கருணாரத்ன பரணவிதான நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்து கோரளவுக்கு அடுத்தபடியாக அந்த மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்றவர் பரணவிதான. கடந்த பொதுத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 36787 ஆகும்

spot_imgspot_img

More like this
Related

சுவாமி விபுலானந்தர் கலாச்சார மண்டபத்தில் மாணவர்களுக்கு பரீட்சை செயலமர்வு

காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம்...

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்