வருகின்ற ஐனாதிபதி தேர்தலில் சமத்துவக்கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கட்சி உறுப்பினர்களிடையே கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரதான வேட்பாளர்களான ஐனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மற்றும் சஜித் பிறேமதாச ஆகியோருக்கும் சமத்துவக் கட்சிக்கும் இடையே சந்திப்புக்கள் கடந்த மாதம் இடம்பெற்றன. இதனையடுத்து கட்சி தனது நிலைப்பாட்டினை எடுக்கும் முகமாக கட்சி உறுப்பினர்களிடையே கருத்தறியும் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா
மாவட்டங்களில் சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களை கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் மற்றும் கட்சியின் தவிசாளர் சு. மனோகரன், மாவட்ட அமைப்பாளர் வேங்கை ஆகியோர் இச் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர்..



