கத்தரிக்கோலால் தாதியை காயப்படுத்திய மருத்துவர் இழப்பீடு வழங்க உத்தரவு!

Date:

நீரிழிவு நோயாளி ஒருவரின் பெருவிரலை துண்டிக்கும் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட குருநாகல் பொது வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் ஒருவர், நோயாளியின் கால் விரலை துண்டிக்கப் பயன்படுத்திய கத்தரிக்கோலால் தாதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தாதியை காயப்படுத்தியது, அவருடைய அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என தீர்ப்பளித்துள்ளது.

தாதிக்கு இழப்பீடாக மருத்துவர் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து ரூ.50,000 வழங்க உத்தரவிடப்பட்டது.

அவருடைய அடிப்படை உரிமைகளை மீறியதற்காக அரசும் தாதிக்கு ரூ.10,000 இழப்பீடாக வழங்க அரசு உத்தரவிட்டது.

மனுதாரரான தாதியர் குருநாகல் பொது வைத்தியசாலையில் பணிபுரிவதாகவும், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி நீரிழிவு நோயாளியின் பெருவிரலை அகற்றுவதற்கு பிரதிவாதியான விசேட வைத்திய நிபுணர் அறுவை சிகிச்சை செய்ததாகவும் வழக்கு விசாரணையின் போது குறிப்பிடப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை அரங்கில் நோயாளியின் கால் விரலை துண்டிக்க ஒரு கத்தரிக்கோலை வழங்குமாறு அறுவை சிகிச்சை நிபுணர் கூறியது தெரியவந்தது.

அறுவை சிகிச்சை செய்த பிறகு, மருத்துவர் கத்தரிக்கோலை மனுதாரரிடம் கொடுத்ததாகவும், அதை அவர் தள்ளுவண்டியில் வைத்ததாகவும் கூறப்பட்டது.

ஆத்திரமடைந்த மருத்துவர், கருவியை தவறான இடத்தில் வைத்ததற்காக தாதியை திட்டி, மனுதாரர் மீது கத்திரிக்கோலை எறிந்து காயப்படுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்