எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க நீர்ப்பாசன மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.




