பிரிட்டனில் கலவரத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது!

Date:

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் நாட்டில் நடக்கும் வன்முறைக் கலவரங்கள் பற்றிக் கலந்துபேச அவசரக் கூட்டம் நடத்தவிருக்கிறார்.

கலவரங்களில் ஈடுபட்ட 150க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குடிநுழைவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வார இறுதியில் பிரிட்டனின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

ரொதெர்ஹெமில்  அடைக்கலம் நாடுவோர் தங்கியிருந்த Holiday Inn ஹோட்டல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் எச்சரித்தார்.

பிரிட்டனில் 3 சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

தாக்குதலை நடத்தியவர் முஸ்லிம் குடியேற்றவாசி என்ற பொய்யான தகவலை வலசாரிகள் பரவியுள்ளனர். அதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை உருவாக்க எண்ணியதாக நம்பப்படுகிறது.

கத்திக்குத்துத் தாக்குதலை நடத்திய சந்தேக நபர் பிரிட்டனில் பிறந்த, கிறிஸ்தவர் எனக் காவல்துறை குறிப்பிட்டதாக CNN செய்தி நிறுவனம் கூறியது.

spot_imgspot_img

More like this
Related

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...

சாய்ந்தமருதில் இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி கற்கை நெறிக்கு புலமைப் பரிசில் வழங்கி வைப்பு

சமுர்த்தி அபிவிருத்தி  திணைக்களத்தின் தேசிய வலுவூட்டல் மாதத்தை முன்னிட்டு சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்