தெல்லிப்பளை மகாஜனவில் மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு!

Date:

தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர், பாடசாலையில் ஆசிரியர் தாக்கியதால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவனை ஆசிரியர் தாக்கியதாகவும், இதனால் மாணவனின் காதுப்பகுதி பாதிக்கப்பட்டதாகவும், மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

காதுப்பகுதி சிவந்து வீங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், மாணவனின் காது பாதிக்கப்பட்டதாகவும் பெற்றோர் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

வகுப்பறையில் நடந்த விவகாரமொன்றையடுத்து மாணவனை இழுத்துச் சென்று ஆசிரியர் தாக்கியதாக மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மன்னார் கடலில் சிக்கிய படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்