எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சார்பில் வேட்பாளரை முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த செயலாளர் நாயகம்; அந்த நபர் யார் என்பது இன்று தீர்மானிக்கப்படவில்லை எனவும், வெற்றியீட்டக்கூடிய வேட்பாளரை முன்வைக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
பெரமுனவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் இன்று பிற்பகல் விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒன்றுகூடினர்.