தென்னக்கோனின் நியமனம் சரியானதென்கிறார் சபாநாயகர்

Date:

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (26) விளக்கமளித்திருந்தார்.

பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு விசேட நடைமுறையொன்று தேவை எனவும், பொலிஸ் மா அதிபர் தொடர்பான நிலைமையை ஜனாதிபதியால் கூட தீர்க்க முடியாது எனவும், தேவைப்பட்டால் நீதிமன்றில் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சபாநாயகரும் அரசியலமைப்பு பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான தீர்மானம் சரியானது, சட்டபூர்வமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டது மற்றும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம், அரசியலமைப்பு சபை மற்றும் பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரியை அப்பதவியில் இருந்து நீக்கினால், விசேட நடைமுறையொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இல்லை என்றால் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.

பொலிஸ்மா அதிபரை நியமிப்பதில் சபாநாயகர் எடுத்த தவறான முடிவு முழு குழப்பத்துக்கும் வழிவகுத்தது என்ற கூற்றை மறுத்த சபாநாயகர், அரசியலமைப்பு விதிகளின்படி பொலிஸ்மா அதிபரை நியமிக்க வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்ததாக கூறினார்.

தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு ஜனாதிபதியால் கூட தீர்வு காண முடியாது என தெரிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்