வெடிமருந்துகளுடன் யாழ்ப்பாணம் வந்த இளைஞன் கைது!

Date:

எழுதுமட்டுவாளில் இருந்து யாழ் நகரத்துக்கு வெடிமருந்து எடுத்து வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியாலை, காளி கோயில் வீதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞன் ஒருவரே, இன்று (25) காலை கைது செய்யப்பட்டார.

ஒரு கிலோகிராம் எடையுள்ள ரிஎன்ரி வெடிமருந்தை தனியார் பேருந்தில் எடுத்து வந்தபோது, இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கண்ணிவெடியகற்றும் பிரிவில் முன்னர் பணியாற்றியுள்ளார். இதனால் வெடிபொருட்களை கையாளும் அனுபவத்தை கொண்டிருந்தார். மனிதநேய கண்ணிவெடியகற்றும் பிரிவினரால் எழுதுமட்டுவாள் பகுதியில் துப்புரவு பணிகள் நடந்தன. அங்க வெடிபொருட்களை சேகரித்து, வெடிமருந்துகளை பிரித்தெடுத்து, மீனவர்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தபோதே சிக்கினார்.

இவர் வெடிமருந்துகளுடன் ஏற்கெனவே பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்