எழுதுமட்டுவாளில் இருந்து யாழ் நகரத்துக்கு வெடிமருந்து எடுத்து வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியாலை, காளி கோயில் வீதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞன் ஒருவரே, இன்று (25) காலை கைது செய்யப்பட்டார.
ஒரு கிலோகிராம் எடையுள்ள ரிஎன்ரி வெடிமருந்தை தனியார் பேருந்தில் எடுத்து வந்தபோது, இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கண்ணிவெடியகற்றும் பிரிவில் முன்னர் பணியாற்றியுள்ளார். இதனால் வெடிபொருட்களை கையாளும் அனுபவத்தை கொண்டிருந்தார். மனிதநேய கண்ணிவெடியகற்றும் பிரிவினரால் எழுதுமட்டுவாள் பகுதியில் துப்புரவு பணிகள் நடந்தன. அங்க வெடிபொருட்களை சேகரித்து, வெடிமருந்துகளை பிரித்தெடுத்து, மீனவர்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தபோதே சிக்கினார்.
இவர் வெடிமருந்துகளுடன் ஏற்கெனவே பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



