வீதியில் நடந்து சென்றதால் கைது செய்யப்பட்ட இளைஞன், குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

Date:

பேலியகொட கட்டுநாயக்க அதிவேக வீதியில் சட்டவிரோதமாக நுழைந்து நடந்து சென்ற இளைஞரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன நேற்று (13) உத்தரவிட்டுள்ளார்.

களனி, வனசல, பொசோன் வத்தை, பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரமிள அன்டனி பலிஹக்கார என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (13) பேலியகொட பொலிஸாரால் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட போதே நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பேலியகொட கட்டுநாயக்க அதிவேக வீதியில் சட்டவிரோதமாக பிரவேசித்து கால்நடையாக சென்றமை மற்றும் சட்டப்பூர்வ காவலில் இருந்து தப்பிச் சென்றமை ஆகிய இரு குற்றச்சாட்டுகளை பேலியகொட பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த மே மாதம் 29ஆம் திகதி பேலியகெட கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் அத்துமீறி நுழைந்து கட்டுநாயக்கவை நோக்கி சுமார் 4 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்றதன் மூலம், 2008 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க வீதிச் சட்டத்தின் 79 (1) பிரிவின் கீழ்  முதலாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அவர் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். பொலிஸ் ஜீப்பில்  பயணித்த போது, ​​அவர் ஜீப்பின் பின் கதவிலிருந்து இறங்கி, தப்பி ஓடி, இலங்கை தண்டனைச் சட்டம் 221 வது பிரிவின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்தார்.

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட குற்றவாளியை அடையாளம் கண்டு தண்டனை வழங்குவதற்காக வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், அவரது கைரேகையை பதிவு செய்ய உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினம் ஒத்திவைத்தது.

spot_imgspot_img

More like this
Related

பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு – தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்த மனு அளிப்பு

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக...

நடிகை ட்விஷா செலவுக்குக் கூட கணவர் பணம் தரவில்லை: சிபிஐ தாக்கல் செய்த எப்ஐஆரில் தகவல்

நடிகை​யும் மாடலு​மான ட்விஷா சர்மா கடந்த மே 12ம் தேதி, போபாலில்...

“எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை” – எஸ்.பி.வேலுமணி விளக்கம்

“எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு இல்லை. அந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்