இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பெண்ணொருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று (12) கைது செய்துள்ளனர்.
ஹொரணை, பல்லாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், கதிர்காமம், கோதமிகம பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரிடமிருந்து 1,689,000 ரூபா பணம் பெற்றதாக பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்படி, குறித்த பெண்ணை பணியகத்திற்கு அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர், குறித்த சந்தேக நபர் பணியக சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டின் ஊடாகவே இலங்கையர்களுக்கு இஸ்ரேலிய வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதன்படி, அந்த விடயத்தில் வெளியாட்கள் எவரும் தலையிட முடியாது எனவும், வேலை வழங்க முடியும் எனக் கூறும் நபர்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலையைப் பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, வெளிநாட்டு வேலைகளுக்கு பணியமர்த்துவதற்கு ஏஜென்சிக்கு சரியான உரிமம் உள்ளதா மற்றும் அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட வேலையைப் பெற்றுள்ளதா என்பதைக் கண்டறியவும். இது ஒரு செல்லுபடியாகும் வேலைவாய்ப்பு நிறுவனமாக இருந்தாலும், 1989 ஹொட்லைனைப் பார்வையிடுவதன் மூலம் அல்லது அழைப்பதன் மூலம் தகவலைப் பெறுமாறு பணியகம் மேலும் வலியுறுத்துகிறது.




