போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தமது பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளது.
மாலையில் புகையிரதங்கள் வழமை போன்று இயங்காது, ஆனால் நாளை காலைக்குள் சேவைகள் வழமைக்கு திரும்பும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இயந்திர சாரதிகளின் இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், சம்பளக் குறியீடு இல்லாத காரணத்தால் ஆட்சேர்ப்புகளில் தொடர்ச்சியான தாமதம் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக தொழிற்சங்க போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.



