இலஞ்சம் வாங்கிய தமிழ் அதிபர் கைது!

Date:

மதிய உணவுக்கான விலைமனு கோரலை பெற்றுக்கொடுப்பதற்காக, 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எஹலியகொட தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே திங்கட்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டு அவிசாவளை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதிபரிர் அசோக்குமார் என்பவரின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

விலைமனு கோரலை அனுமதிப்பதற்காக சந்தேகநபர் 30,000 ரூபாவை கேட்டதாகவும், ஆரம்பத்தில் 10 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும், மீதி 20 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்ட போதே கைது செய்யப்பட்டதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து: பிரகாஷ்ராஜ் மீது பாஜக போலீசில் புகார்

ராமாயணம் குறித்து சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்ததாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது ஆந்திர...

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது....

போர் நிறுத்தத்தை நீடித்தார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்