மதிய உணவுக்கான விலைமனு கோரலை பெற்றுக்கொடுப்பதற்காக, 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட எஹலியகொட தமிழ் வித்தியாலயத்தின் அதிபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே திங்கட்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டு அவிசாவளை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதிபரிர் அசோக்குமார் என்பவரின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
விலைமனு கோரலை அனுமதிப்பதற்காக சந்தேகநபர் 30,000 ரூபாவை கேட்டதாகவும், ஆரம்பத்தில் 10 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும், மீதி 20 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்ட போதே கைது செய்யப்பட்டதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.



