யாழில் மின் கட்டணம் செலுத்தாமல் சென்ற இராணுவம்!

Date:

மானிப்பாய் கிறீன் மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்த இராணுவ முகாமின் மின்கட்டண நிலுவையான நான்கரை இலட்சம் ரூபாவை செலுத்தாமல், அந்த முகாமை விட்டு இராணுவத்தினர் வெளியேறிச் சென்றுள்ளனர்.

தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயரான டானியல் தியாகராஜாவின் காலத்தில் இருந்து, மானிப்பாய் கிறீன் மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்கியிருந்தனர்.

அண்மையில் இந்த முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியிருந்தனர்.

இராணுவ முகாமின் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மின் கட்டண நிலுவையை இராணுவத்தினர் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறிய விடயம் தெரிய வந்துள்ளது.

கடந்த 4 வருடங்களாக அங்கு முகாம் அமைத்து தங்கியிருந்த இராணுவத்தினரே மின்கட்டண நிலுவையை செலுத்த வேண்டுமென தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்