யாழில் மின் கட்டணம் செலுத்தாமல் சென்ற இராணுவம்!

Date:

மானிப்பாய் கிறீன் மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்த இராணுவ முகாமின் மின்கட்டண நிலுவையான நான்கரை இலட்சம் ரூபாவை செலுத்தாமல், அந்த முகாமை விட்டு இராணுவத்தினர் வெளியேறிச் சென்றுள்ளனர்.

தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயரான டானியல் தியாகராஜாவின் காலத்தில் இருந்து, மானிப்பாய் கிறீன் மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்கியிருந்தனர்.

அண்மையில் இந்த முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியிருந்தனர்.

இராணுவ முகாமின் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மின் கட்டண நிலுவையை இராணுவத்தினர் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறிய விடயம் தெரிய வந்துள்ளது.

கடந்த 4 வருடங்களாக அங்கு முகாம் அமைத்து தங்கியிருந்த இராணுவத்தினரே மின்கட்டண நிலுவையை செலுத்த வேண்டுமென தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பல லட்சம் பக்தர்கள் திரண்ட முருக பக்தர்கள் மாநாடு: அநீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் ஒன்றிணைவோம் – பவன் கல்யாண் பேச்சு

நீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதுரையில்...

ஈரானின் அணுசக்தி, ஏவுகணை இலக்குகளை அழிக்கும் இலக்கின் அருகில் இருக்கிறோம்: இஸ்ரேல் பிரதமர்!

ஈரானில் இஸ்ரேல் தனது இலக்குகளை அடைவதற்கு மிக அருகில் உள்ளது என்று...

ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் நடந்தது எப்படி?: அமெரிக்கா விளக்கம்!

அமெரிக்க இராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, சனிக்கிழமை இரவு மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்