நீதிமன்றத்துக்குள் யுவதியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்ட சட்டத்தரணி கைது!

Date:

நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் சந்தேகநபர் தம்மை இரு கைகளாலும் பிடித்து இழுத்து, உடலில் சாய்த்து, அங்க சேட்டையில் ஈடுபட்டு, தனது காதலை வெளிப்படுத்தியதாக திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய அலுவலக உதவியாளர் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன் எதிரொலியாக நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் இலக்கம் 02 நீதிமன்றத்திற்குச் சென்ற உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கடவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சட்டத்தரணியான சந்தேக நபரை கைது செய்தனர்.

நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்