கொழும்பில் ஈரானிய தூதரை தாக்க முற்பட்ட வர்த்தகருக்கு விளக்கமறியல்

Date:

ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் மீது நேற்று மாலை கொழும்பு சிட்டி சென்டரில் கார் பார்க்கிங்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கொழும்பு 7 ஐ சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 07, வார்ட் பிளேஸில் வசிக்கும் புவனேக மஹாசென் பஸ்நாயக்க (வயது 36) என்ற சந்தேகநபரே கைது செய்யப்பட்டார்.

கார் பார்க்கிங்கில் தனது வாகனத்தை நிறுத்த முற்பட்ட தூதுவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் வர்த்தகர் தூதுவரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் தூதுவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி தொழிலதிபரை தப்பிச் செல்ல விடாமல் வர்த்தகரின் காரின் பொனட்டில் கையை வைத்து தடுக்க முற்பட்ட போது, பொலிசார் வரும் வரை காத்திருக்குமாறு சாரதிக்கு அழைப்பு விடுத்த போது வியாபாரி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அவரை நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய ரூ.800 கோடி பெறுமதியான போதைப்பொருள்: தமிழ் வர்த்தகர் கைது!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்தில் இருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472...

மஹிந்த கூட்டத்திற்கு மதிய உணவு வழங்கியவருக்கு 14 வருட சிறை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், 2014-ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள...

ஊடகவியலாளர்களிற்கு வாய்ப்பூட்டு போட முயலும் ஜேவிபி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்