தைவானின் புதிய அதிபரான லாய் சிங்-தே பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமையன்று தைவான் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
நாடாளுமன்றச் சீர்திருத்தங்கள் குறித்த கடும் வாக்குவாதத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து, பாராளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையைச் சுற்றி வளைத்தபோது அரசியல்வாதிகள் மேசைகளில் தாவி ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர்.
பிரதான எதிர்க்கட்சியான கோமிண்டாங் (KMT) மற்றும் அதன் கூட்டாளிகள், அரசாங்கத்தின் மீதான ஆய்வுக்கு அதிக அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்குவதற்கான முயற்சியால் இந்த வாதம் வெடித்தது.
பாராளுமன்றத்தில் தவறான அறிக்கைகளை வெளியிடுவதாகக் கருதப்படும் அதிகாரிகளை குற்றவாளிகளாக்கும் சர்ச்சைக்குரிய நடவடிக்கையும் இதில் அடங்கும் – இது புதிய அதிபர் லாயின் ஜனநாயக முற்போக்குக் கட்சியால் (DPP) “அரசியலமைப்புக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகம்” என்று நிராகரிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே, சில நாடாளுமனற உறுப்பினர்கள் பாராளுமன்ற அறைக்கு வெளியே ஒருவரையொருவர் கூச்சலிட்டு தாக்கினர்.
திங்கட்கிழமை பதவியேற்கவிருக்கும் லாய், ஜனவரி தேர்தலில் வெற்றி பெற்றார், ஆனால் அவரது ஜனநாயக முற்போக்கு கட்சி (DPP) பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.
முக்கிய எதிர்க்கட்சியான கோமிண்டாங் (KMT), DPPயை விட அதிக இடங்களைக் கொண்டுள்ளது, ஆனால் தனிப்பெரும்பான்மையை அமைக்க போதுமானதாக இல்லை, எனவே அது சிறிய தைவான் மக்கள் கட்சியுடன் (TPP) அவர்களின் பரஸ்பர யோசனைகளை மேம்படுத்துவதற்காக வேலை செய்து வருகிறது.
பாராளுமன்றத்தில் தவறான அறிக்கைகளை வெளியிடுவதாகக் கருதப்படும் அதிகாரிகளை குற்றவாளிகளாக்கும் சர்ச்சைக்குரிய திட்டம் உட்பட, அரசாங்கத்தின் மீது அதிக ஆய்வு அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்க எதிர்க்கட்சி விரும்புகிறது.
“அரசியலமைப்புக்கு முரணான அதிகார துஷ்பிரயோகம்” என்று DPP அழைக்கும் வழக்கமான ஆலோசனை செயல்முறை இல்லாமல் KMT மற்றும் TPP ஆகியவை முறையற்ற முறையில் முன்மொழிவுகளை கட்டாயப்படுத்த முயற்சிப்பதாக DPP கூறுகிறது.
“நாங்கள் ஏன் எதிர்க்கிறோம்? நாங்கள் விவாதங்களை நடத்த விரும்புகிறோம், நாட்டில் ஒரே குரல் மட்டும் இருக்கக்கூடாது” என்று தெற்கு நகரமான சியாயை பிரதிநிதித்துவப்படுத்தும் DPP பாராளுமன்ற உறுப்பினர் வாங் மெய்-ஹுய் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
இந்த மோதலில் பாதுகாப்பு வேண்டி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஹெல்மெட் அணிந்து பாராளுமன்றத்துக்கு வந்திருந்தனர்.
தைவான் ஒரு பரபரப்பான ஜனநாயக நாடு, அங்கு பாராளுமன்றத்தில் அவ்வப்போது சண்டைகள் நடைபெறுகின்றன. 2020 ஆம் ஆண்டில், KMT நாடாளுமன்ற உறுப்பிர்கள் அமெரிக்க பன்றி இறைச்சி இறக்குமதியை எளிதாக்குவது தொடர்பான தகராறில் அறையின் தரையில் பன்றி குடல்களை வீசினர்.
இந்த மோதல்கள் லாயின் புதிய அரசாங்கம் பதவியேற்ற பிறகு இன்னும் கொந்தளிப்பு – மற்றும் பாராளுமன்ற மோதல் – ஏற்படுவதற்கான வாய்ப்பை எழுப்புகிறது.



