24.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

யாழில் போதை ஊசி ஏற்றப்பட்டு சீரழிக்கப்பட்ட பெண்: சூத்திரதாரியான சகோதரனுக்கு விளக்கமறியல்!

மனநலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், அரியாலையை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியிலுள்ள காப்பகத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து காப்பகத்தில் வசித்து வந்த சகோதரியை , அரியாலையில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

பின்னர் கடந்த வாரம் மீண்டும் காப்பகத்தில் சகோதரன் தனது தங்கையை கொண்டு சென்று சேர்த்துள்ளார்.

அங்கிருந்த சக பெண்களிடம், தனக்கு நேர்ந்த கொடுமையை அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இது காப்பக நிர்வாகத்தின் கவனத்துக்கு சென்று, அவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதித்தனர்.

கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியதும் தெரிய வந்துள்ளது. பெண்ணின் உடலில் ஊசி செலுத்திய, சிகரெட்டால் சூடு வைத்த, கை முறிந்த அடையாளங்கள் தென்பட்டன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் , பெண்ணின் சகோதரனே , பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும் , போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருமானம் பெற்றமையும் தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் சம்பவத்தை மறுத்ததாக தெரிய வருகிறது. சலூனில் காலை முதல் இரவு வரை வேலை செய்வதாகவும், மதுபோதையில் இரவு வீட்டுக்கு செல்வதாகவும், மதுபோதையில் ஏதேனும் செய்தேனா என்பது தெரியவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் யாழ்,நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 8 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment