எனக்கு வாய்ப்பு கிடைத்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை பிடிப்பேன்!

Date:

எனக்கு வாய்ப்பு கிடைத்தால், ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை நிச்சயம் பிடிப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தலஹேனவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (21) இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்த தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் இன்னமும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வுத் தகவல்களின் பிரகாரம் தாக்குதல் நடத்தப்பட்ட திகதி, நேரம் மற்றும் இடம் போன்றவற்றை அரச புலனாய்வு அதிகாரிகள் அறிவித்திருந்தும் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி...

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்