சட்டவிரோத மின்கம்பி வேலியில் சிக்கி ஒருவர் பலி

Date:

நாவலப்பிட்டியில் விவசாய தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக தோட்ட நிர்வாக அதிகாரி மீது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மரக்கறி செய்கை நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த நாவலப்பிட்டி- கிரேவ்ஹெட் தோட்டத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தியாகு செபஸ்டியன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

“உயிரிழந்த தனது தந்தை, ஞாயிற்றுக்கிழமை (24) காலை தோட்ட அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தோட்ட வேலைக்குச் சென்றார்.

தனது தந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிற்பகல் 3 மணியளவில் தோட்ட அதிகாரியால் தகவல் தரப்பட்டது.

வைத்தியசாலைக்கு சென்றபோது, ​​தனது தந்தையின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்து” என உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் மகள் நாவலப்பிட்டி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

மரக்கறிச் செய்கை நிலத்தைப் பாதுகாப்பதற்காக தோட்ட அதிகாரியால் மரக்கறிச் செய்கை நிலத்தில் சட்டவிரோதமாகப் போட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ் அதிகாரியின் காணிக்குள் சிறுத்தைத் தோல்!

புத்தளம், அட்டவில்லு பகுதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்குச்...

வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பு நாளை!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேன்முறையீட்டு மனுவின்...

யாழில் விஜய் இரசிகர் எடுத்த விபரீத முடிவு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், வெற்றியீட்டியுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்