தேசபந்து தென்னக்கோனின் நியமனத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

Date:

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றில் இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிரோஷன் பாதுக்கவினால் ஒரு மனுவும், திருமதி சாவித்திரி குணசேகரவினால் மற்றுமொரு மனுவும் சமர்ப்பிக்கப்பட்டது.

அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோர் இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேசபந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கவில்லை என மனுதாரர்கள் கூறுகின்றனர்.

தென்னகோன் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதியினால் அத்தகைய அனுமதியின்றி நியமிக்கப்பட்டமை முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என மனுதாரர்கள் கூறுகின்றனர்.

தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனின் நியமனத்தை செல்லுபடியற்ற உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்