இளம் மனைவியின் தலையில் ஒரே போடு… பல மாதங்கள் நாடகமாடிய கணவன் கைது!

Date:

முச்சக்கரவண்டியில் இருந்து தவறி விழுந்ததாக குறிப்பிட்டு, தலையில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண், ஒரு மாதத்தின் பின் உயிரிழந்திருந்தார். இந்த மரணம் கொலை என சந்தேகிக்கப்பட்டு அவரது கணவரை களுத்துறை குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தனது மனைவியை மழுங்கிய ஆயுதத்தால் தலையில் தாக்கி பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுரலிய, மரகஹதெனிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி இரவு, சந்தேக நபர் தனது மனைவி எம்.பி.கசுனி துலீகா என்ற 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய், முச்சக்கரவண்டியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்ததாக பதுரலிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அவரது நிலைமை மோசமாக இருந்ததால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2023 மே 7 ஆம் திகதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்